Monday 17 August 2015

மந்திரப் புன்னகை

மோனாலிசா 


குனித்த புருவமும், கொவ்வை செவ்வாயில் குமிழ்சிரிப்புமாக இருக்கும் உலகப்புகழ் பெற்ற ஓர் ஒவியம் மோனாலிசா ஓவியம்.
அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் முகத்தில் கடந்த 500 ஆண்டுகாலமாக இனம்புரியாத மர்மப் புன்னகை ஒன்று உதிராமல் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.
யார் அந்தப் பெண்? அந்த சிரிப்பின் மர்மம் என்ன என்பது இன்றுவரை யாருக்குமே புரியாத புதிர்.
ஓவியர் லியார்னோடோ டாவின்சி, இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்தபோது, பிரான்செஸ்கோ டி பர்த்தலோமியஸ் டி சானோபி டெல் ஜியாகோண்டா (?) என்ற பட்டுவணிகர் அவரைச் சந்தித்தார். தனது மூன்றாவது மனைவியான லிசா டி அன்டோனியோ மாரியார்டி நோல்டோ ஜெரார்டினியை (?) ஓவியமாக வரைந்து தரும்படி கேட்டார்.
ஜெரார்டினிக்கு அப்போது வயது 24. அவரை மாடலாக வைத்து ஓவியம் தீட்ட ஆரம்பித்தார் டாவின்சி. நான்கு ஆண்டுகள் கழித்து, அதாவது 1507ல் டாவின்சி பிரான்ஸ் நாட்டுக்குப் புறப்பட்டார்.

அப்போது மோனாலிசா ஓவியத்தை டாவின்சி, சில்க் வணிகரிடம் ஒப்படைக்க வில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம். ஒன்று அந்த ஓவியம் அப்போது முற்றுப் பெறாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது அந்த  ஓவியத்தின் மீது டாவின்சி காதல் கொண்ட காரணத்தால், அதைத் தர மனமில்லாமல் கையோடு எடுத்துக் கொண்டு பிரான்சுக்குப் போயிருக்க வேண்டும்.
1516ல் பிரான்ஸ் மன்னர் முதலாம் பிரான்சிஸின் அரசவை ஓவியராகச் சேர்ந்தார் டாவின்சி. அப்போது மோனாலிசா ஓவியத்தை மன்னர் விரும்பிக் கேட்டதால் அதை 4 ஆயிரம் தங்க நாணயங்களுக்கு அதை விற்றார். ஏறத்தாழ ஒரு லட்சம் டாலர்களுக்கு சமமான தொகை அது அப்போது.
மோனாலிசா ஓவியத்தை மன்னர் முதலாம் பிரான்சிஸ் மாட்டி வைத்திருந்த இடம் அவரது கழிப்பறை.
காலங்கள் கடந்து நெப்போலியன் போனபார்ட் பிரான்ஸ் நாட்டின் மன்னரான போது மோனாலிசா ஓவியம் அவரது படுக்கையறையை அலங்கரித்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப்பிறகு இந்த ஓவியம் பாரிஸ் நகரத்தின் லூவர் அருங்காட்சியகத்தில் போய்ச் சேர்ந்தது.
மோனாலிசா ஓவியம் எத்தனைப் பேரை பாடாய்ப்படுத்தியிருக்கிறது தெரியுமா? 1800களின் நடுப்பகுதியில் வாழ்ந்த ஓவியர் லுக் மாஸ்பெரோ என்பவர், எனது தற்கொலைக்கு மோனாலிசா ஓவியமே காரணம் என்று எழுதி வைத்து விட்டு நான்காவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
1911ல் லூவர் அருங்காட்சியகத்தில், ஊழியராக வேலைபார்த்த இத்தாலிக்காரர் ஒருவர் சமயம் பார்த்து மோனாலிசா ஓவியத்தை அமுக்கிக் கொண்டு இத்தாலிக்கு ஓடிவிட்டார். அன்று பாரிஸ் நகரமே அழுது புலம்பியது. மக்கள் தெருக்களில் நின்று அழுது புலம்பினார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் திருடரிடம் இருந்து ஓவியம் மீட்கப்பட்டது. மோனாலிசா ஓவியம் இத்தாலி நாட்டின் சொத்து. அதனால்தான் திருடினேன் என்று அந்த ஓவியர் வியாக்கியானம் வேறு செய்தார். நல்லவேளை, ஓவியம் அவரிடம் இருந்தபோது எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
1956ல் பொலிவியா நாட்டைச் சேர்ந்த ஓர் இளைஞர், மோனாலிசா ஓவியத்தின் மீது கல்லை விட்டெறிய, மோனாலிசாவின் முழங்கைப் பகுதி பாதிப்படைந்தது. அதன்பின் குண்டு துளைக்காத மூன்றடுக்கு கண்ணாடிகளின் பாதுகாப்பில், 55 சதவிகித ஈரப்பதத்துடன் பத்திரமாக இருக்கிறது மோனாலிசா ஓவியம்.
லியோன் மெகுசா என்ற  தொழிலதிபர், மோனாலிசா மீது கொண்ட காதலால் மோனாலிசாவைத் தினமும் பார்க்கும் ஆசையில், தனது நிறுவனத்தை வந்த விலைக்கு விற்றுவிட்டு லூவர் மியூசியத்தில் சம்பளம் இல்லாத காவல்காரராக வேலைக்குச் சேர்ந்து விட்டார். ஒப்புரான சத்தியமா நான் காவல்காரன் என்று மோனாலிசாவைத் தினமும் காவல் (காதல்) புரிந்து வருகிறார் அவர்.
பாரிஸ் நகரின் லூவர் மியூசியத்தில் மொத்தம் ஆறாயிரம் அரிய கலைப்பொருள்கள் இருந்தாலும், மக்கள் நிதமும் முண்டியடித்து கூட்டம் கூட்டமாக வந்துபார்ப்பது மோனாலிசா ஓவியத்தைத்தான்.
அந்த ஓவியத்தைப் பார்க்கும்போது காதுக்குள் ஒரு மர்மான இசை கேட்பதாகக் கூட வதந்தி உண்டு.
இப்போது மோனாலிசாவின் மோகனப்புன்னகைக்கு வருவோம்.

No comments :

Post a Comment