Sunday 6 September 2015

வண்ணத்துப்பூச்சி


சித்திரச் செவ்வானம்! சிறகுகளில் தானும்
ஒத்திகைகள் பார்த்து வரலாச்சு! _அது
    ஓவியமாய் பூத்திரியும் வண்ணத்துப் பூச்சி!

மஞ்சளிலே நீந்தும்! மங்கை நகச்சாந்தும்
எஞ்சியதில் பட்டுவிடலாச்சு! _அது
    ஏழுநிறமாய்த் திரியும் வண்ணத்துப்பூச்சி!

குங்குமத்தின் குலவை! கூட்டும் வண்ணக்கலவை!
அங்கமெல்லாம் கொட்டி வரலாச்சு! _ அது
Mohan Reuban's photo.   ஆகாயப் பூப்பறக்கும் வண்ணத்துப்பூச்சி!

ஓவியப்பூவொன்று ஓரிருநாள் சென்று
தாவிவந்து வான் பறக்கலாச்சு! _அது
   தான் மலரில் தேன்குடிக்கும் வண்ணத்துப்பூச்சி!
................
ஒரு பூவை பொட்டு வைத்த பொழுது

பிறை விட்டமானதை 
குறைபட்டுப் போனதை 
நிறைவட்டமாக்கினாள் மாது!_ அவள்
   நெற்றியில் பொட்டிடும் போது!

நெற்றியில் ஒருவிரல் 
ஒற்றிய பிறகவள்
சுற்றியதென்னடி மாயம்?_ அதில்
   சூரியன் தந்ததா சாயம்?

வண்ணத்துப் பொட்டாள்!
வானவில் தொட்டாள்!
எண்ணினேன் தினமொரு வண்ணம்!_நான்
   ஏழ்நிறம் காண்கிறேன் இன்னும்!

_மோகனரூபன்

No comments :

Post a Comment