Saturday 8 August 2015

பாயிண்ட்தலிசம்

6.பாயிண்ட்தலிசம்

சின்னஞ்சிறு புள்ளிகளில் முழு ஓவியம்

பாயிண்ட்தலிசம்.  புதிய இம்ப்ரசனிசத்தின் இன்னொரு பெயர் என்று இதைச் சொல்லலாம். பாயிண்ட்தலிசம் என்பது இம்ப்ரசனிச ஓவியர்களில் மிக முக்கியமான சிலர் பயன்படுத்திய நுணுக்கமான கலை வடிவம் ஆகும். ஜியார்ஜஸ் சூரா, பால் சிக்னாக் போன்றவர்கள் இந்த கலை வடிவத்துக்கு மெருகேற்றினார்கள்.
19ஆம் நூற்றாண்டில், வண்ணங்களுக்கு இருந்த அறிவியல் ரீதியிலான கொள்கையை இவர்கள் புதிய முறையில் அணுகினார்கள்.
தூய, முழுமையான கலக்காத வண்ணங்களில், பொடிப்பொடி புள்ளிகள் மூலம் இவர்கள் ஓவியங்களை வரைந்தனர்.
ஒன்றுடன் ஒன்று கலக்காத இந்த வண்ணச்சிறு புள்ளிகள் தொலைவில் இருந்து பார்க்கும்போது ஓவிய வடிவமாகத் துலங்கும்.
இதில் ஒவ்வொரு புள்ளியும் கவனமாக ஒன்றுடன் ஒன்று வினை புரிந்து, மிக அதிசக்தி வாய்ந்த அதிர வைக்கும் விளைவு ஒன்றை ஓவியத்தில் உருவாக்கி இருக்கும்.
இதே வண்ணங்களைக் குழைத்து, வழக்கமான ஓவியத்தைத் தீட்டினால் அந்த வனப்பு கண்டிப்பாக வராது.
புதிய இம்ப்ரசனிச ஓவியர்கள் பலர் பாயிண்ட்தலிசத்தைக் கையில் எடுத்தனர். இருபதாம் நூற்றாண்டு ஓவியத்தில் இந்த பாயிண்ட்தலிசம் பெரும் செல்வாக்கு செலுத்தியது.
ஜியார்ஜஸ் சூராவின் லெஸ் போசியஸ் ஓவியம் (1888) பாயிண்ட்தலிசத்தின் சிறந்த எடுத்துக்காட்டு.


No comments :

Post a Comment