Friday 7 August 2015

இம்ப்ரசனிசம்

4. இம்ப்ரசனிசம் 

இம்ப்ரசனிசம் 1860களில் ஓர் எளிய ஓவிய இயக்கமாக உருவெடுத்தது. அன்றாட வாழ்க்கையின் எளியத் தன்மையை ஈர்த்தெடுப்பது இம்ப்ரசனிசம் என வகைப்படுத்தப்பட்டது.
மோனட், பால் சீசான் ஆகியோர் இம்ப்ரசனிச ஓவிய இயக்கத்தின் முன்னணி ஓவியர்களாக முகிழ்த்தார்கள். பிசாரே, ரெனார் போன்றவர்களும் இம்ப்ரசனிச ஓவியர்கள்தான்.
வெயில் பரப்பும் பெருவெளிகளில் இருந்தபடி இயற்கை அள்ளித் தெளிக்கும் அழகை இவர்கள் வேகவேகமாக வரைந்தனர். பார்த்ததை உடனுக்குடன் திரைச் சீலையில் பதிவு செய்தனர்.
இயற்கையை, அதன் ஒளியை, அதன் உருமாறும் தன்மையை கண்கவர் வண்ணங்களால் அவர்கள் கைப்பற்ற முயன்றனர்.
கிளாட் மொனேயின் வாட்டர் லில்லி என்ற அல்லிக்குளம் (1899) ஓவியம், இந்த இம்ப்ரசனிச ஓவியத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.


No comments :

Post a Comment