Monday 3 August 2015

ஓவிய இசங்கள்

ஓவிய இசங்கள்


1. மறுமலர்ச்சிக் காலம்


மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், அறிவார்த்த கலை மேதமையும், ஓவியப் படைப்புகளும் மறுபிறப்பெடுத்தன. இயற்கையியல் ஈடுபாடு அப்போது கூடியது. பண்டைய ரோமின் கலைகளையும், இலக்கியங்களையும் புத்துருவாக்கம் செய்யும் ஆவல் வளர்ந்தது.
கட்டடக் கலைஞர்கள் பண்டைய ரோம் நகரின் வனப்புடன் புதிய கட்டடங்களைக் கட்டியெழுப்ப, ஓவியக் கலைஞர்களோ இதிகாசம், வரலாறு போன்றவற்றை பெர்ஸ்பெக்டிவ் நுட்பத்துடன் படைக்கத் தொடங்கினார்கள்.
1486ல் சாண்ட்ரோ பாட்டிசெல்லி வரைந்த
வீனஸின் பிறப்பு என்ற ஓவியம் இந்த வகைப்பாட்டில் அடங்கும்.

No comments :

Post a Comment