Tuesday 11 August 2015

எக்ஸ்பிரசனிசம்


8. எக்ஸ்பிரசனிசம்

உருவைக் கெடுத்து...  உண்மையைத் திரித்து....

எக்ஸ்பிரசனிசம் என்பது ஓர் ஓவியக் கருத்து. நேரில் தெரியும் யதார்த்தத்தின் பிரதிநிதித்துவத்தைக் கெடுத்து, உள்ளிருக்கும் தரிசனத்தை, பார்வையை வெளிக் கொண்டுவருவது எக்ஸ்பிரசனிசத்தின்  முக்கிய அம்சம்.
இம்ப்ரசனிஸ்டுகள் தத்தெடுத்து வளர்த்த கொள்கையான, இயற்கையை நகலெடுக்கும் பாணிக்கு இது முற்றிலும் நேர்எதிரான அணுகுமுறை ஆகும்.
ஜெர்மன் நாடு எக்ஸ்பிரசனிசத்தின் முக்கிய நடுவமாக உருவெடுத்தது.
டெர் பிளே ரெய்டர் (நீல சவாரிக்காரன்) என்ற குழு, மிக முதன்மையான எக்ஸ்பிரசனிச ஓவியக்குழுவாகத் திகழ்ந்தது.
வாசிலி கான்டன்ஸ்கி, பால்கிளி போன்றவர்கள் இந்தக் குழுவின் அனுக்க உறுப்பினர்கள்.
இலக்கிய உலகிலும் எக்ஸ்பிரசனிசம் புகுந்தது. ரியலிசம், இம்ப்ரசனிசத்துக்கு எதிரான கலகக்குரலாக அது மாறியது.
பிரான்ஸ் காப்கா, அகஸ்ட் ஸ்டிரின்ட்பெர்க், ஜேம்ஸ் சாய்ஸ் போன்றவர்கள் இலக்கிய உலக எக்ஸ்பிரசனிசத்தில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
1910ல் உருவான, இகோன் சிய்ல்லியின்  தன்னோவியத்தின் அலறல் என்ற கலைப்படைப்பு, எக்ஸ்பிரசனிசத்துக்கு மிக அழகான எடுத்துக்காட்டு.
ஸ்கீவெனிங்ஸ்சன் கடல் கிராமம் என்ற ஓவியமும் இந்த வகைப்பாட்டில் அடங்கும்.

No comments :

Post a Comment