Friday 7 August 2015

புதிய அல்லது பிந்தைய இம்ப்ரசனிசம்

5. புதிய அல்லது பிந்தைய இம்ப்ரசனிசம்

1880ல்தான் பிந்தைய இம்ப்ரசனிசம் இனிதே பிறந்தது.
பிந்தைய இம்ப்ரசனிசத்துக்கு இப்படியொரு பெயரைச் சூட்டியவர் ஒரு பிரிட்டிஷ்காரர். அவர் ஒரு ஓவிய விமர்சகர். அவரது பெயர் ரோகர் பிரை.
இந்த சொல்லாடலுக்குச் சொந்தக்காரர் அவர்தான். இதை முதன்முதலில் உச்சரித்தவரும் அவர்தான்.
பால் சீசான் அப்போது பாரிஸ் நகரின் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவராக உருவாகியிருந்தார்.
இம்ப்ரசனிச ஓவியங்களில் மட்டுமல்ல, பிந்தைய இம்ப்ரசனிச ஓவிய பாணியிலும் அவர் கொடி கட்டிப் பறந்தார்.
பாரிஸ் நகரில் அப்போது பல்கிப் பெருகியிருந்த பல்வேறு ஓவிய ஸ்டைல்களை விவரிக்க இந்த சொல்லாடலை ஓவியர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
ஓவியங்களில் புதுப்புது உத்தியை ஆய்ந்து பார்த்த ஓர் ஒவியத் தலைமுறையை இந்த பிந்தைய இம்ப்ரசனிசம் என்ற சொல் உள்ளடக்குகிறது.
பால் சீசான், பால் காகின், ஜார்ஜியஸ் சூரா, வின்சென்ட் வான்கா போன்றவர்கள் இந்த பாணியிலான ஓவியர்கள்.
இவர்களுக்குள் தனித்தனி ஓவிய ஸ்டைல்கள் இருந்தாலும், இவர்கள் அனைவரும் பின் இம்ப்ரசனிச ஓவியர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள்.

இந்த பின் இம்ப்ரசனிச ஓவியத்துக்கு அற்புதமான ஓர்எடுத்துக்காட்டு வின்சென்ட் வான்காவின் இத்தாலியப் பெண் என்ற ஓவியம். 1888ல் வான்காவின் வண்ணத்தில் அந்த ஓவியம் முகிழ்த்தது.
பால் சீசானும், வான்காவும்   பின் இம்ப்ரசனிச ஓவியர்கள்தான் என்றாலும் இருவருக்கும் இடையில் தனித்தனி ஸ்டைல்கள் இருந்தன.
பால் சீசான் அதே 1888ஆம் ஆண்டு தனது புகழ்  பெற்ற ஓவியம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியிருந்தார். அந்த ஓவியத்தின் பெயர் ஆப்பிள் ஆரஞ்ச் எலுமிச்சை.
பின்னாட்களில் அந்த ஓவியம் பால் சீசானின் தலைசிறந்த ஓவியமாகக் கொண்டாடப்பட்டது. லண்டன் சாத்பை ஏலக் கடையில், 29.5 மில்லியன் டாலருக்கு அது ஏலம் போனது.

No comments :

Post a Comment