ரபேலைட்டுக்கு முந்தையவர்கள்
2. ரபேலைட்டுக்கு முந்தையவர்கள்
1848ஆம் ஆண்டு பிரித்தானிய ஓவியக் கலைஞர்களின் கூட்டிணைவால் இந்த புதிய கலைஇயம் தோற்றமெடுத்தது.
ஹோல்மன் ஹண்ட், ஜான் எவரெட் மில்லாய்ஸ், தாந்தே காப்ரியல் ரோசட்டி ஆகியோர் ரபேலைட்டுக்கு முந்தைய ஓவியர்களில் மிக முக்கியமானவர்கள்.
அவரவர்களின் தனித்தன்மைகளில் வித்தியாசங்கள் இருந்தாலும், இந்த பாணியிலான ஓவியர்கள் ஸ்டைல்,
புத்துணர்வுக்காக பழைமையை, தேடுவது, இதிகாசம், வரலாறு, பண்டைய இலக்கியம் போன்றவற்றில் இருந்து கருப்பொருளைத் தேடுவது போன்றவற்றில் ஒத்துப் போனார்கள்.
இவர்கள் இயற்கையைப் பார்த்து நேரடியாக வரை
ந்தார்கள். வரலாற்றுக் காட்சிகளை ஓவியமாக வரையும் போது அது உண்மையில் நடந்திருக்கலாம் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள்.
1864ல் தாந்தே காப்ரியல் ரோசட்டி படைத்த, ஹேரேஷியோ ஒபிலியாவின் உன்மத்தத்தைக் கண்டுபிடித்த போது என்ற ஓவியம், இந்த பாணியில் அமைந்த சிறந்த ஓவியம்.
No comments :
Post a Comment