கடல்விலாங்கு மீன் (Eel)
ஆகவே, கண்களை நம்பால் விலாங்கு மீன், முழுக்க முழுக்க மோப்பத்திறனையே நம்பி வாழும்.
பகலில் மறைந்திருந்து இரவில் புறப்படும் விலாங்குகள், மோப்பத்தால் மட்டுமே இரையைப்
பின்தொடர்ந்து வேட்டையாடக் கூடியவை.
கடலடியில் சகதி மணல், பார் இடுக்குகளைத் தவிர, மூழ்கிய கப்பல்கள், படகுகளிலும்
விலாங்குகள் நிரந்தரமாக தங்கி வாழும். ‘மூழ்கிய கப்பல்களில் உள்ள புதையல்களைக் காக்கும்
காவலாளி‘ என்ற செல்லப்பெயரும் கூட விலாங்குக்கு உண்டு.

விலாங்கின் உடலில் உள்ள வழுவழுப்புத்தன்மை (Mucus) மூன்று விதங்களில் பயன்தரக்
கூடியது. ஒன்று பார் இடுக்குகளில் விலாங்குகள் நுழையும் போது இந்த வழுவழுப்பு காரணமாக
சிராய்ப்புக்காயம் ஏற்படாது. இரண்டாவதாக, வேகமாக நீந்த இந்த வழுவழுப்புத்தன்மை உதவுகிறது.
அதோடு எதிரிகளின் கையில் சிக்கும்போது பிடிபடாமல் வழுக்கிச் செல்லவும் வழுவழுப்புத்
தன்மை பயன்படுகிறது.
No comments :
Post a Comment