Sunday 6 September 2015

நதி

உடைந்த நீர்த்துளிகளின் ஊர்வலம்!
கரைபுரளும் கண்ணாடிச் சாறு!
ஆதாமின் குளியல் தொட்டி!
ஏவாள் முகம் பார்த்த முதல் கண்ணாடி!
நதி, நகரும் மீன்காட்சி அரங்கம்!
நதி, வானவில்லின் ஏழு வண்ணத்தில் நீல வரியை மட்டும் நெளிய விட்ட அழகு!
நதி ஒரு நகரும் சாலை. இந்த நீலச்சாலையின் நெடுகே விழுந்தால் இது நம்மையே இழுத்துச் செல்லும் நவீன சாலை!
நதி படகுளை தன் முதுகில் விட்டும் பயணம் செய்யும். குழந்தைகளாக குடங்களுக்குள் வந்தும் குடிபுகும்!
   -மோகனரூபன்

No comments :

Post a Comment